உலக செய்திகள்விசேட செய்தி

UPDATE – ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது..



ஜப்பானில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினை தொடர்ந்து விடுக்கப்பட்ட கடும் சுனாமி எச்சரிக்கை தற்போது தகர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – கடும் சுனாமி எச்சரிக்கை.

ஜப்பானில் இன்று(22) பயங்கர நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி பேரலைகள் புகுஷிமா அணு உலை பகுதியை ஆக்ரோஷத்துடன் தாக்கியுள்ளன.

ஜப்பானின் புகுஷிமா அணு உலை பகுதியை மையமாகக் கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் பயங்கரமாக குலுங்கின.

சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின.

இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நியூசிலாந்தின் தெற்கு தீவு பகுதிகளிலும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அண்மையில்தான் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

நைஜீரிய கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வெடிப்பு – ஐவர் பலி

wpengine

தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

wpengine

பாகிஸ்தானில் வீசும் அனல் காற்றால் 141 பேர் பலி

wpengine