உலக செய்திகள்

புகையிரத நிலையங்களில் செல்பி எடுக்க தடை..


தமிழகத்தில் உள்ள ரயில்வே நிலையங்களில், ரயில் பாதைகளில், பொது மக்கள் ‛செல்பி’ எடுக்க ரயில்வே துறை தடை விதித்துள்ளது.

சென்னை, கிண்டி ரயில் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் இளைஞர் ஒருவர், ரயில் பாதையில் நின்று ‛செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது ரயில் மோதி படுகாயம் அடைந்தார்.

அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இதை தொடர்ந்து, தமிழகத்தில் ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில் பாதைகளில், பொதுமக்கள் ‛செல்பி’ எடுக்க ரயில்வே துறை தடை விதித்துள்ளது.

‛தடையை மீறி ‛செல்பி’ எடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

Related posts

கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரி பாகிஸ்தான் நீதிமன்றில் வழக்கு

wpengine

இன்று முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் மீனவர்கள்

wpengine

11 நாடுகளின் அகதிகள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்…

wpengine