உள்நாட்டு செய்திகள்

மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கத் தடை..


பாடசாலை ஆசிரியர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பதை தடுப்பதற்காக புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட இருப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறுகின்றார்.

இவ்வாறு நிதி சேகரிப்பதன் மூலம் இலவசக் கல்விக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், பாடசாலைக்குள் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பெற்றோர்களிடம் இருந்து கிடைத்த கோரிக்கைகளை ஆராய்ந்து பாரத்ததன் பின்னரே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குளியாபிட்டிய, நக்காவத்தை மஹிந்த தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

wpengine

ஊசி ஏற்றப்பட்ட மற்றுமொரு பெண்ணின், உயிரை காப்பாற்ற வைத்தியர்கள் கடும் போராட்டம்..!

wpengine

மஹேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் அனுப்பிவைப்பு

wpengine