உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறைச்சாலைகளில் CCTV கமெரா பொருத்தும் திட்டம் கைவிடப்பட்டது.


வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மகசின் சிறைசாலை வளாகங்களில் சி.சி.டி.வி கமெரா பொருத்தத் தீர்மானித்து, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம், தற்போது கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலைகளுக்கு சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்கு 30 மில்லியன் ரூபாய் செலவாகும் என்பதனால் குறித்த இவ்வேலைத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாரளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

எனினும், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதாகத் தீர்மானிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட மூன்று சிறைச்சாலைகளின் நுழைவாயில்களில் மாத்திரம், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இதனை இவ்வருட இறுதிக்குள் செய்து முடிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

wpengine

AstraZeneca-விற்கு இரண்டாவது டோஸாக Pfizer

wpengine

மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம்

wpengine