உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிலஅளவையாளர் சங்கமும் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை.


நிலஅளவையாளர்களுக்கு பயிற்சி வழங்கும் அதிகாரத்தை தனியார் துறைக்கு வழங்குவதற்காக விடுத்துள்ள அரச வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யாது போனால் அடுத்த வாரம் முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச நிலஅளவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அரச நிலஅளவையாளர் திணைக்களத்தை ஆக்கிரமிப்புச் செய்யும் நோக்கில் புதியவர்களுக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகவும் அச்சங்கம் மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி இன்று (07) நாரஹேன்பிட்டி நிலஅளவையாளர் திணைக்களத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் தலைவர் டபிள்யு.எம்.டீ.பீ. உடுகொட அறிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – சட்டமா அதிபர்..

wpengine

ஆமி சம்பத் பயங்­க­ர­வாத புலனாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்படைப்பு

wpengine

இன்றும் நாளையும் கடும் காற்று…

wpengine