உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

GMOA இனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் போராட்டம் வெடிக்கும் – கல்வியமைச்சுக்கு சிவப்பு சமிஞ்சை..


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் போராட்டம் நடத்த நேரிடும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை விடுத்துள்ளார்.

அரசாங்க வைத்திய சங்க அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு மட்டும் பிரபல பாடசாலைகள் வழங்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தலையீட்டில் அவ்வாறு அரச வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு மட்டும் பிரபல பாடசாலைகளில் இடம் வழங்கப்பட்டால் நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இடம் ஒதுக்கப்படுவதனால் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்தும் மாணவ மாணவியருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோருடன் இணைந்து இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது குறித்து தற்போது பேசப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை..!

wpengine

கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாகனங்களுக்கு விசேட தரிப்பிட வசதிகள்…

wpengine

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் திசாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine