உள்நாட்டு செய்திகள்

சமல் ராஜபக்ஷவை ஓரங்கட்டி ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக மஹிந்த..



ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக, முன்னாள் சபாநாயகரும் எம்.பியுமான சமல் ராஜபக்ஷவே நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், இவ்வாண்டு நடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கடந்த இரண்டு கூட்டங்களிலுமே, சமல் ராஜபக்ஷ பங்கேற்கவில்லை.

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனத்தை அவர், ஏற்றுக்கொள்ளாததன் காரணமாகவே, அப்பதவிக்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

Related posts

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு

wpengine

மார்ச் 20 முதல் நிலுவைத் தொகையுடன் முதியோர் கொடுப்பனவு

Azeem Kilabdeen

20வது திருத்தச் சட்டமூல பிரேரணை பிற்போடப்பட்டது…

wpengine