உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் விசேட பணிகளுக்காக புதிய செயலாளர் நியமிப்பு



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் தேசிய பத்திரிகை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் செயலாளராக துசார டீ வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியுடன் இவர் இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்முறை சமூகவியலாளரான இவர் அரசு அல்லாத பல தேசிய அமைப்புகள் பலவற்றில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்தவர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேடமாக வடக்கு,கிழக்கு பகுதிகளில் சுனாமியின் ஏற்பட்ட பின்னர் சேதமடைந்த பாடசாலைகளை புனரமைக்கும் செயற்திட்டத்தின் பணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியினதும், பிரதமரினதும் மிகவும் நெருக்கமான இவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்து பிரதமருக்காக வேலைகளில் ஈடுபட்டவர் என்றும், தற்போதும் இவர் பிரதமரின் சமூக ஊடகப்பிரிவின் பிரதானியாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நேவி சம்பத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

“புத்தளத்தின் எதிர்பார்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதில் என்றும் நான் முதன்மையானவன் என்ற வகையில் மாணவன் முஹம்மத் முன்சிப் பெற்றுக் கொடுத்துள்ள பெறுபேறு என்பது எமது சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும்.” -தேசியத்தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன்-

wpengine

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா

wpengine