ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கனவிலும் நினைக்கவில்லை – மேர்வினின் அதிரடி பதில்



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவி கிடைப்பது தொடர்பில் ” கனவில் கூட நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, எதிர்காலத்தில் அவ்வாறானதொரு பதவி கிடைக்கும் என்பது தொடர்பில் எதனையும் கூற முடியாது.

ஏனென்றால் நான் மை வெளிச்சம் பார்ப்பவன் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை அமைப்பாளர் பதவி கிடைக்கப் போவதாக வெ ளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

இணையத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளிவரும் அவை அனைத்தும் உண்மையில்லை.

அதேபோன்றுதான் எனக்கு ஹம்பாந்தோட்டை சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவி கிடைக்கப் போவதாக வெளியான செய்தியில் எதுவும் உண்மையில்லை.

சிலர் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிட்டு சந்தோஷமடைகின்றனர்.

நான் கனவில்கூட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவி கிடைப்பதை நினைக்கவில்லையென்றும் மேர்வின் சில்வா தெரிவித்தார்

Related posts

கன்னி கழியாத பெண் : ஊடகங்களுக்கு கசக்கும் உண்மைகள்

wpengine

ஜெனீவா பயணத்திற்காக 20 மில்லியன் செலவாம்..

wpengine

ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணியில் மாற்றம் – இரு குழாம்களும் இதோ…

wpengine

1 comment

Ibnuaboo May 30, 2016 at 1:26 am

நீங்களதானே இன்று வைத்திய வரத்தகம் செய்யும் கோடீஸ்வர்ர்கள். வைத்திய சாலைகள் எல்லாம்காய்நது கிடக்கும்.ஆனால் உங்கள் பிரைவட் யாவாரம் நிரம்பி வழியும். இந்ந வரி உங்கள் வருமானத்தைக்கு மூக்கு தூள்

Comments are closed.