ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த மற்றும் கோத்தபாயவை முடியுமானால் கைது செய்யுமாறு மேர்வின் சவால்



தான் பரிசுத்தமானவன் என்றும்,தனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கபடவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டவர்கள் மஹிந்தவும், அவரது சகோதரர் கோட்டபாயவுமே என மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு அரச தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை தனக்கு எதிராக நிதி மோசடி, சொத்து சேகரிப்பு, துஸ்பிரயோகம், கொலை மற்றும் போதைபொருள் விற்பனை என்ற எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் என்மீது முன்வைக்கபடுமாயின் அதனை நிரூபித்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தற்போதைய அரசாங்கத்திடம் மேர்வின் சில்வா சவால் விடுத்துள்ளார்.

Related posts

காலி, மாளிகாவத்தை, தர்கா நகர் பகுதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

wpengine

வேறு எங்கும் இல்லாத பாராளுமன்றம் இலங்கையில் உள்ளது!

wpengine

அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்ய கோத்தாபய அமெரிக்கா பயணம்..

wpengine