உள்நாட்டு செய்திகள்

அரநாயக்க மண்சரிவில் சிக்குண்டோரின் 9பேரின் இறுதிக் கிரியைகள் இன்று



மாவனல்ல, அரநாயக்க பாரிய மண் சரிவில் புதையுண்டு உயிரிழந்த 9 பேரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம்(20) நடைபெறவுள்ளது.

மண்சரிவில் புதையுண்ட 14 சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது என மண்சரிவு மீட்புப் பணிகளுக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சடலங்களில் 9 சடலங்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

நேற்றைய தினம் அரசாங்க அதிகாரிகளும் பிரதேச மக்களும் இணைந்து நடத்திய கூட்டத்தின் போது, ஒன்பது பேரின் இறுதிக் கிரியைகளை இன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் தலையீட்டுடன் இன்று ஒரே இடத்தில் இந்த மண் சரிவில் உயிரிழந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்பட உள்ளனர்.

அரநாயக்க பொது மயானத்தில் இந்த இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது.

Related posts

ரிஷாத் எனக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை – தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி சாட்சியம்

wpengine

ஜனாதிபதி – விக்னேஸ்வரன் இடையிலான சந்திப்பு இன்று

wpengine

302 அதிபர்களுக்கு தேசிய பாடசாலைகளில் நியமனம் – நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பம்…

wpengine