உள்நாட்டு செய்திகள்

அரநாயக்க மண்சரிவில் சுமார் 134 பேர் இன்னும் மண்ணில் புதையுண்டிருக்கலாம்



மாவனல்ல அரநாயக்க மண்சரிவில் 134 பேர் இன்னும் மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் புதையுண்ட 14 சடலங்கைள மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

எனினும் இன்னும் 134 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரநாயக்க, எலங்கபிட்டிய சாமசர மலை இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டது.

 

மண்சரிவு அனர்த்தம் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக காணப்படுவதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினமும் மாலை 4.30 அளவில் கடுமையான மழை பெய்த காரணத்தினாலும் மண்சரிவு அபாயம் நீடித்த காரணத்தினாலும் மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அரநாயக்க மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையாக பதிவாகக்கூடிய அபாயம் காணப்படுவதாக மேலும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

பதுளை எரிபொருள் நிரப்பு நிலைய துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது!

News Editor

ஜனாதிபதி அனுப்பிய பகிரங்க கடிதம்!

News Editor

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமர் ரணிலின் அறிவிப்பு

wpengine