உள்நாட்டு செய்திகள்

பாரத லக்ஷ்மன் கொலை – தாம் நிரபராதி துமிந்த தெரிவிப்பு



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் தாம்vநிரபராதி என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல்நீதிமன்றத்தில் அவர் நேற்றைய தினம் (04) இதனை தெரிவித்தார்.

தம்மீது சுமத்தப்பட்டுள்ள 17 குற்றச்சாட்டுக்களில் இருந்து தாம் விடுவிக்கப்படவேண்டும் என்று அவர் நீதிமன்றில் மேலும் கோரிக்கை ஒன்றினையும் விடுத்தார்.

2011ம் ஆண்டு ஒக்டோபர் 8ம் திகதியன்று இடம்பெற்ற பாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நான்கு பேரின் கொலை வழக்கு விசாரணையில் துமிந்த சில்வா 13வது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

wpengine

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

wpengine

இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு…

wpengine