உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் தாஜுதீன் கொலை – மேலும் இருவர் வலையில்..


பிரபல இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.

விசாரணைகளின் மூலம் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய சந்தேக நபர்களின் தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், உறுதியாக ஆதாரங்கள் காணப்படும் இரண்டு சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வஸீம் தாஜூடின் கொலை குறித்த விசாரணைகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை சிங்கள சினிமாவின் மூத்த நடிகர் நந்தசிறி காலமானார்.

wpengine

22ம் திகதி வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் தபால் ஊழியர்கள்

wpengine

சரண குணவர்தன நீதிமன்ற முன்னிலையில் குற்றத்தினை ஒப்புக்கொண்டார்..

wpengine