உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஷிரந்தி ராஜபக்ஷ இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில், ஊடக இணைப்பாளராக செயற்பட்ட ஒருவருக்கு குறைந்த மதிப்பீட்டில் வீடொன்றை வாங்கிக் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த வீட்டை அவருக்கு வழங்குமாறு ஷிராந்தி ராஜபக்ஷ, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அந்த வீடு, ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியானது என, காட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ள போதிலும், அதன் உண்மையான பெறுமதி 55 இலட்சம் ரூபா என, பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

wpengine

பதில் காவல்துறைமா அதிபருக்கு சட்டமா அதிபரால் அறிவிப்பு

wpengine

புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

wpengine