உள்நாட்டு செய்திகள்

துறைமுக உள்நுழைவதற்கான கட்டண அதிகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்



துறைமுகத்திற்குள் உள்நுழைவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக துறைமுக பயனாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது துறைமுகத்திற்குள் உள்நுழையும் கட்டணம் 4000 ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது இன்று பகல் கோட்டை YMBA கட்டடத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

அதிக விலையில் உர மூடைகளை விற்போருக்கு எதிராக நடவடிக்கை…

wpengine

‘ஜீவன் மல்லி’ கைது…

wpengine

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

wpengine