உள்நாட்டு செய்திகள்

10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கடந்த 14 நாட்களில் மாத்திரம் வட மாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல் துன்புறுத்தல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், இதில் சில பாடசாலைகளில் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கவலையை அளிப்பதாக அமைச்சர் கூறினார்.

இதற்கமைய கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்றுள்ள இச் சம்பவங்களில் 10 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வீ.இராதாகிருஷ்ணன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts

பேரூந்துக் கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அதிகரிக்கும் – கெமுனு விஜேரத்ன…

wpengine

இன்று முதல் டி-20 சுருளுமா மேற்கிந்திய தீவுகள் அணி

wpengine

BPLஇல் பங்கேற்கும் வீரர்களுக்கு எச்சரிக்கை வலுப்பெறுகிறது..?

wpengine