உள்நாட்டு செய்திகள்

13 வயது சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்



கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கிராமமான 2ம் கட்டை கோரக்கன்கட்டு என்னுமிடத்தில் வசிக்கும் இராசையா கமலேஸ்வரி 13 வயது என்னும் சிறுமி கிணற்றிலிந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று (29-05-2015) கானமல் போயிருந்த நிலையில் பிற்பகல் 4.00 மணிக்கு அவரின் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கிணற்றிற்கு  தண்ணீர் எடுப்பதற்கு சென்றவேளை கிணற்றிற்குள் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகித்த உறவினர்கள் கிணற்றைப்பார்த்தபோது கொண்ட சென்ற வாளி கிணற்றின் அருகில் இருந்தது.

இதனையடுத்து கிராமஅலுவலர் பொலிசார் ஆகியோருக்குதகவல் வழங்கியதை அடுத்;த குறித்த சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்

குறித்த சிறுமியின் தாய் வேலைக்கென அரபு நாட்டிற்குச் சென்றுள்ளார். தந்தை வற்றாப்பளை அம்மன்கோவிலுக்கு திருவிழாவிற்கென சென்றுள்ளார்.

மேற்படி பெற்றோர்களின்; கவனயீனம் காரணமாகவே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளாதாக தெரியவருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை குறித்து சாகல கருத்து…

wpengine

இதுவரையில் 3,016 நோயிலிருந்து மீண்டனர்

wpengine

களனி கங்கையின் நீர் மட்டம் படிப்படியாக குறைகிறது

wpengine