ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்தியாவில் புகைத்தலுக்கு அடிமையாகும் இளம் பெண்கள்



உலக அளவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படியே உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகி விட்டது. இளைஞர்கள் மத்தியில் இந்த பழக்கம் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் புகை பிடிக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் எடுத்த புதிய கருத்துக்கணிப்பில், இந்திய பெண்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பது தெரிய வந்துள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சோனாலி, ‘‘புகை பிடிப்பதால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது’’ என்றார்.

புகை பிடிப்பதால் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது நன்கு தெரிந்திருந்தும் புகை பிடிப்பதாக அவர்கள் கூறியதாக ஆய்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

இந்திய இளம் பெண்களிடம் பரவி வரும் புகை பிடிக்கும் மோகத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் எந்த பலனும் கிடைக்காதது கவலைக்கிடமே.

Related posts

பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹசன் உபாதைக்கு…

wpengine

சிறைக்குள் அரங்கேற்றப்பட்ட நாடகம்! கட்சி உறுப்பினர்களின் கேள்விகளால் திணறிய வீரவன்ச!

wpengine

இங்கிலாந்தினை வீழ்த்தி இலங்கையினை முன்கொண்டுவர நீங்களும் கைகோருங்கள்…

wpengine