Top Story 1சூடான செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் டேன் பிரியசாத் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து  அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிறைபிடிக்கப்பட்ட 250 இஸ்ரேலியர்கள், ‘இஸ்லாமிய நம்பிக்கைக்கு’ இணங்க நன்றாக நடத்தப்படுகிறார்கள் – அல்-கஸ்ஸாம்..!

wpengine

மஞ்சள் நிறம் கொண்ட கடவைகள் நிறம் மாறுகின்றன.

wpengine

பொய் பேசுகிறார் ஜனாதிபதி ரணில்! சுமந்திரனின் டுவிட்டர் பதிவு

wpengine