Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, தேசபந்து தென்னகோனை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் கடந்து மார்ச் 19ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் அவரை இன்று (10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனக்கு எதிரான வழக்கிற்கு வெளிநாட்டு பிரதிநிதிகளின் உதவியினை நாடவுள்ளேன் – திஸ்ஸ…

wpengine

அரநாயக்க பிரதேசத்திற்கு ஜனாதிபதி விஜயம்

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதிக்கு ஜேவிபி கடிதம்…

wpengine