Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றிரவு SJB – UNP இடையே மற்றொரு கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெறும் பல சுற்று கலந்துரையாடல்களில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (28)   இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் இன்றிரவு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், இரு தரப்பினரும் இன்னும் கலந்துரையாடல் நடைபெறும் இடத்தை அறிவிக்கவில்லை.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற விவாதம் எழுந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுடனும் இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.

அதன்படி, இன்று மூன்றாம் சுற்று கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

முந்தைய கலந்துரையாடல்களின் போது முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் இரு கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடப்படும் என்றும், அவர்களின் கருத்துக்கள் இன்றைய கலந்துரையாடலில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் குழு இன்று (28) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இந்த முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாட உள்ளனர்.

Related posts

மேல் மாகாணத்தில் இன்று முதல் தடுப்பூசி

wpengine

மண்சரிவு எச்சரிக்கை – 390 பேர் வெளியேற்றம்

wpengine

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு…

wpengine