உள்நாட்டு செய்திகள்

சீரற்ற வானிலை – 15 மாவட்டங்கள் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இரண்டாம் நாள் இன்று

wpengine

ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

Azeem Kilabdeen

ஜனாதிபதி பிரதமருடன் கலந்துரையாட வேண்டும் – அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள்..

wpengine