Top Story 1உள்நாட்டு செய்திகள்

தென்கொரிய ஜனாதிபதி கைது!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் இயோல் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இம்மாத முற்பகுதியில் அவரைக் கைது செய்வதற்கான விசாரணை அதிகாரிகளின் முதல் முயற்சியும் தோல்வியடைந்ததை அடுத்து இந்தக் கைது இடம்பெற்றதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான வழக்கு நேற்று (14) அழைக்கப்பட்ட போது, ​​அவரது பிடியாணையை நீடிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தது.

டிசம்பரில் இராணுவச் சட்டத்தை விதித்து நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

தாஜுதீன் கொலை – முக்கிய ஆறு நபர்களது வங்கிக் கணக்குகளை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

wpengine

தேசிய சட்ட வாரம் இன்று(21) முதல்

wpengine

மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தவும் – ஜனாதிபதி

wpengine