Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரயிலில் மோதி நபரொருவர் மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு அம்பலாங்கொட தர்மசோக வித்தியால மாவத்தையில் உள்ள புகையிரத கடவைக்கு அருகில் இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்.

உயிரிழந்தவரின் மனைவி முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பேரூந்து பயணிகள் சங்கம் எதிர்ப்பு…

wpengine

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம் நியாயமாது – ஜேவிபி..

wpengine

இலங்கை விஜயமாகிறார் யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இரினா.

wpengine