Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக இம்ரான் கான் அறிவிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களைக் (101 இடங்களில்) கைப்பற்றியிருந்தாலும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலி கான் கூறியதாவது:

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.) ஆகிய இரு கட்சிகளுடனும் எங்களுக்கு கொள்கை முரண் உள்ளது. எனவே, இதில் எந்தக் கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம். அதைவிட, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். புதிய பாராளுமன்றத்தில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக பி.டி.ஐ. செயல்படும் என்றார்.

Related posts

சிகரெட் பிடித்து விட்டு மீதியை வீதியில் எறிந்தால் ரூ.15,000 அபராதம்

wpengine

மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் நியமனம்

wpengine

PCR இற்கான நிர்ணய கட்டணத்தில் அதிகரிப்பு

wpengine