உலக செய்திகள்சூடான செய்திகள்

சீனாவில் வரலாறு காணாத உறைபனி, மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சீனாவில் வரலாறு காணாத அளவு பனிப் பொழிவதால் அங்கு மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஜிஜின் பிங் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் பனிப்பொழிவு காலம் தொடங்கியவுடனே புதிய உச்சத்தில் குளிர்நிலை பதிவாகியுள்ளதால் பொதுப் போக்குவரத்தில் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர வரும் நாட்களில் சீனாவில் பரவலாக பல பகுதிகளிலும் பூஜ்ஜிய டிகிரி அல்லது அதற்கும் குறைவாகவே வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகின்றது.

வியட்நாமை ஒட்டிய குய்சு மாகாணத்திலும் கடும் குளிர், உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, எரிசக்தி, எண்ணெய், எரிவாயு விநியோக நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதோடு, அவற்றில் இருந்து மக்களுக்கு தடையில்லா விநியோகம் நடப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

காற்றுக்கு உண்டோ இறப்பெல்லாம்..?

wpengine

கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் இலங்கை விஜயம்.

wpengine

நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றி

News Editor