Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது..!

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெற்ற விபத்து

வெள்ளவத்தை, கடற்பரப்பை அண்மித்த வீதியில் நேற்று (28) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவி செனவிரத்ன ஓட்டிச் சென்ற கார் பஸ் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

அரசியல் கைதிகள் குறித்து இன்று பேச்சுவார்த்தை…

wpengine

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

wpengine