உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உரிமம் இல்லாத பேருந்துகளை தேடி நாடு முழுவதும் சோதனை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை சுற்றிவளைப்பதற்காக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்காக 4 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

அண்மையில் பொலன்னறுவை, மனம்பிட்டிய கொட்டாலிய பாலத்தில் இருந்து பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், குறித்த பேரூந்தும் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இன்று முன்னெடுக்கவுள்ள மே தினக் கூட்டங்கள்…

wpengine

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

wpengine

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வலியுறுத்து!

News Editor