விளையாட்டு

இலங்கை – ஆப்கான் போட்டியில் இருந்து ரஷீத் கான் நீக்கம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
இலங்கை அணியுடனான முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்பின்னர் ரஷீத் கான் நீக்கப்பட்டுள்ளார்.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் முழு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரஷீத் கான் பங்கேற்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ஒருவரான ரஷீத் கான், உலக ஒருநாள் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 06வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசையிலும் ரஷீத் கான் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஷாக் ரன்னர்ஸ்-அப் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தார்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

Related posts

ICC தலைவர் 22ம் திகதி இலங்கைக்கு

wpengine

இந்திய வீரர்கள் மைதானத்தில் இராணுவ தொப்பியுடன் – பாகிஸ்தான் ICC இடம் முறைப்பாடு…

wpengine

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 என்ற வெற்றி இலக்கு

wpengine