Top Story 2உள்நாட்டு செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அதன் புதிய விலை 199 ரூபாவாகும்.

கீரி சம்பா விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 225 ரூபாவாகும்.

அத்துடன் பெரிய வெங்காயத்தின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 225 ரூபாவாகும்.

மேலும் நெத்தலியின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 1,150 ரூபாவாகும்.

 

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணி

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

விமல் வீரவங்ச குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில்…

wpengine