உள்நாட்டு செய்திகள்

ஐந்து இலட்சம் ரூபாவை தாண்டிய மின் கட்டணம் : திம்புலாகல விகாரையில் மின்துண்டிப்பு..!

வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல விகாரையில் நேற்று (28) மாலை மின்சாரம் துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்ததன் காரணமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட பிக்குகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

திம்புலாகல விகாரை வரலாற்றில் மின்சாரம் துண்டிக்கப்படுவது இதுவே முதல் தடவை என அதன் சேனாசன தலைவர் மில்லனே சிரியாலங்கார தெரிவித்துள்ளார்.

ஐந்து இலட்சம் ரூபாவை தாண்டிய மின் கட்டணம் காரணமாக விகாரைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுப்பதாக திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

‘வற்’ வரிச்சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 3 மனுக்கள்..

wpengine

களுத்துறை துப்பாக்கிச்சூடு – ஹொரணை தொழிற்சாலை STF இனால் சுற்றிவளைப்பு…

wpengine

பிரிட்டனின் பிரபல பாப் பாடகரான, ஜார்ஜியஸ் மறைந்தார்..

wpengine