Top Story 1உள்நாட்டு செய்திகள்

“வெளிநாட்டில் இருக்கும் பசில் நாடு திரும்பிய பின்னர், பிரதமர் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா..?”

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை என ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (18) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் பிரதமர் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

“பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை. அமைச்சரவையில் இதுபோன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Related posts

வெளிநாட்டு மருத்துவப் பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் சட்டம் விரைவில்..!

wpengine

அவன்கார்ட் கணக்காய்வாளரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

wpengine

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 117வாக்குகளுடன் பிரேரணை நிறைவேற்றம்..

wpengine