Top Story 2உள்நாட்டு செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அசாத் சாலி..!

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சாட்சிகளை வழங்குவதற்காகவு அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

காணி ஒன்றினை விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற 80 இலட்சம் ரூபாவினை குறித்த பெண்ணிடம் முதலீடு செய்ததாக வெளியான தகவல்கள் தொடர்பிலேயே அசாத் சாலி சாட்சியம் வழங்குவதற்கு முன்னிலையாகியுள்ளார்.

ஜானகி சிறிவர்தன என்ற பெண்ணின் ஊடாகவே 80 இலட்சம் ரூபாவினை பெற்றுக்கொடுத்ததாக அசாத்சாலி தெரிவித்திருந்தார்.

கடந்த 05 ஆம் திகதி கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலி, எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..

wpengine

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்

Azeem Kilabdeen

அவதூறு வழக்கில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ரஞ்சன்!

wpengine