உள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவின் மனைவியை மிரட்டி கப்பம் கோரிய இளைஞன் கைது..!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொலன்னாவ பிரதேசத்தில் சலூன் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் அயோமா ராஜபக்சவின் தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பு விடுத்த நபர் ஒருவர் அவரிடம் 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரியுள்ளார்.

தொடர்ந்து அழைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தான் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி எனவும் இவ்வாறு அழைப்பேற்படுவதனை நிறுத்துமாறும் அயோமா ராஜபக்ச குறித்த நபரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் யாரிடம் பேசுகிறேன் என தனக்கு தெரியும் என அழைப்பேற்படுத்திய இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.   

Related posts

பா.உ நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு.

wpengine

அரச ஆய்வாளர் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவினை அரசு வழங்கும்…

wpengine

மின் வெட்டை கட்டுப்படுத்த புதிய கோரிக்கை

wpengine