உள்நாட்டு செய்திகள்

76 அமைச்சர்கள் செலுத்தாத நீர்கட்டணம் 11 கோடி : 30 நாட்கள் காலக்கெடு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

2022 ஜூலை வரை அரசாங்க குடியிருப்பில் வசிக்கும் 76 அமைச்சர்கள் பதினோரு கோடியே 8 லட்சம் ரூபாய் தண்ணீர் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், இந்த கட்டணங்களை அவர்கள் முப்பது நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால். ஒக்டோபர் 15 ஆம் திகதி அவர்களுக்கான நீர் துண்டிக்கப்படும் என்று சபாநாயகருக்கு நீர்வழங்கல் அதிகார சபை கடிதம் அனுப்பியுள்ளது.

COM/AGM/CR28 என்ற எண்ணைக் கொண்ட 15.09.2022 திகதி இடப்பட்ட இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தற்போதுள்ள 34 அமைச்சர்கள் 4 கோடியே 4 இலட்சமும், 27 முன்னாள் அமைச்சர்கள் 4 கோடியும், உயிரிழந்த 15 அமைச்சர்கள் 3 கோடியும் செலுத்த வேண்டியுள்ளது இது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் அனுப்பி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயிரிழந்த அமைச்சர்களிடம் இருந்து வரவேண்டிய பணத்தை வசூலிக்குமாறு நீர்வழங்கல் அதிகார சபை சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.

Related posts

ஐ.தே.முன்னணியின் புதிய முன்னணியின் பெயர் மாற்றம்…

wpengine

இன்றும் பணிப்புறக்கணிப்பு

wpengine

ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

wpengine