Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இந்த வாரம் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கும் – அமைச்சர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த வாரத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படுவதால் சுத்திகரிப்பு பணிகளை எந்த தடங்கலும் இல்லாமல் தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுத்திகரிப்பு நடவடிக்கைகள் உட்பட செப்டெம்பர் முதல் டிசம்பர் வரையிலான எண்ணெய் தாங்கி சரக்கு திட்டங்கள் குறித்து விவாதிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வணிக மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு அதிகாரிகள் இன்று காலை அமைச்சரை சந்தித்தனர்.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்கள் நியமனம்

wpengine

உணவு ஒவ்வாமை காரணமாக 54 சிறுவர்கள் மருத்துவமனையில்…

wpengine

முன்னாள் அமைச்சர் ரோஹிதவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல்

wpengine