உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தெரிவில் ரணிலுக்கு வெற்றி உறுதி: முன்னாள் அமைச்சர் பகிரங்க அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 140 இற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடுவார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் என்ற ரீதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றேன்.

எனவே, தற்போதைய பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதுடன், அனைவரினதும் ஆசீர்வாதத்துடன் பதவியேற்பார். அவர் இறுதித் தருணத்தில் எவ்வித வாத விவாதங்களும் இல்லாமல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம்.

ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையை ஆசியாவின் அதி சிறந்த நாடாக மாற்றுவார்.

உலக நாடுகளில் இலங்கையை சிறந்த நாடாகவும் மாற்றுவார். ஏனெனில் அரசியலில் 50 வருட அனுபவம் உள்ள தலைவரே ரணில். அவர் மீது எவ்வித அவநம்பிக்கையும் கொள்ளக்கூடாது” என கூறியுள்ளார்.

Related posts

அவைத் தலைவராக தினேஷ் குணவர்தன

wpengine

ஹிலாரி கிளின்டனின்இணையத்தளத்துக்கு சைபர் தாக்குதல்

wpengine

கடத்தப்பட்ட கார் மீட்கப்பட்டது

wpengine