உள்நாட்டு செய்திகள்

ஜனவரியில் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய கொரோனா வைரஸ் பிறழ்வினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அழைக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது 25 வீத மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சில பல்கலைக்கழக விடுதிகளில் 3,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ள காரணத்தினால், அவர்களை மீளவும் அழைத்தால் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடையே கொவிட் தொற்று பரவும் அபாயம் ஏற்படுமென அவர் கூறியுள்ளார்.

Related posts

அரச ஊடகப் பேச்சாளர்களாக கெஹெலிய மற்றும் மஹிந்த நியமனம்..

wpengine

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

Azeem Kilabdeen

வாழ்க்கைச் செலவினம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது – சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்..!

wpengine