Top Story 1உள்நாட்டு செய்திகள்

மின்வெட்டுக்கான சாத்தியம் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று(29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விவாதத்தில் சபாநாயகர் மற்றும் அவைத்தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரும் தலையிட்டனர்.

வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்று 6ஆவது நாளாகவும் நடைபெற்றுவரும் நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் செலவினத் தலைப்புகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

ஜின்னா புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரல்

wpengine

இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவு…

wpengine

IPL போட்டியில் இம்முறை அறிமுகமாகிறது DRS முறை….

wpengine