Top Story 2உள்நாட்டு செய்திகள்

மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்களைக் கொண்டுள்ள 30 – 60 வயதுக்கு உட்பட்டோருக்கு இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் இவ்வாறு பைஸர் தடுப்பூசியை செயலூட்டியாக செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

120 பேரூந்து வீதியூடாக இன்று விசேட போக்குவரத்து திட்டம்..

wpengine

நெதர்லாந்து அரசு இலங்கை அரசிடம் வேண்டுகோள்..

wpengine

ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை.. (VIDEO)

wpengine