உள்நாட்டு செய்திகள்

மூன்று மணித்தியாலங்களில் PCR பெறுபேறு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை(25) முதல் இதனூடாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், ஹிரு செய்திகள் ஊடாக வெளிக்கொண்டுவரப்பட்ட, பிசிஆர் பெறுபேறுகள் கிடைக்கப்பெறும் வரையில் கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவோரிடம் அதிக கட்டணங்களை வசூலிக்கும் மோசடி செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன நியமனம்…

wpengine

போதைப்பொருள் குறித்த தகவல்களுக்காக விசேட பிரிவு…

wpengine

இராணுவ தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

wpengine