உள்நாட்டு செய்திகள்

இன்றும் சில பகுதிகள் விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சில பிரதேசங்கள் இன்று (20) காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள யட்டிவாவல கிராம சேவகர் பிரிவின் சாகரதெனிய வத்தை விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவின் குடா வஸ்கடுவ மேற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Related posts

களனி கங்கையின் நீர் மட்டம் உயரும் சாத்தியம்.. மக்களை அவதானமாக இருக்கக் கோரிக்கை

wpengine

பாடசாலையில் இருந்து டெனேட்டர்கள் மீட்பு

wpengine

12 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine