Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு சவாலாகும் இயற்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 பேர் காணாமல் போயுள்ள நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதையுண்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 23 வயதுடைய யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கேகாலை அல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் குறித்து குறித்த நபருக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு அவரை வீட்டில் இருந்து வௌியேற கூறியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வெல்லம்பிட்டியில் கைக்குண்டு, துப்பாக்கிகளுடன் இருவர் கைது

wpengine

பிரதமரின் உறுதிமொழி தவறினால் அரசிற்கு சிவப்பு சமிக்ஞை தான் – ஜே.வி.பி

wpengine

நிசங்க, மென்டிஸ், சமரவிக்கிரம, அசலங்க, தீக்சன போன்ற வீரர்களை கொண்ட அணி எவ்வாறு மோசமாக விளையாடமுடியும் ? – ஹர்சா போக்லே கேள்வி..!

wpengine