உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர், பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டதையடுத்தே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

Related posts

மேலும் 177 பேர் நாடு திரும்பினர்

wpengine

மைத்ரி ஜனாதிபதி ப்ரனாப் முகர்ஜியை சந்திக்கிறார் (UPDATE)

wpengine

நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு 2/3 பெரும்பான்மை வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவிப்பு…

wpengine