Top Story 2உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 17ம் திகதி முதல் முடக்கப்படும் இடங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதியின் பிந்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணகி அம்மன் ஆலயவீதியும், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள லேக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதிகள் முதலான பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா காவல்துறை அதிகார பிரிவில், கிண்ணியா, பெரியகிண்ணியா, குட்டிக்கராச்சி, அல்தர் நகர், பெரியாத்துமனை, மலிந்தூர், ரஹுமானியான் நகர், சின்னகிண்ணியா, மண்வெளி, கட்டையாறு, குறிஞ்சான்கேணி, முனைச்சேனை முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், குருநாகல் மாவட்டத்தில், கிரிவுள்ள காவல்துறை அதிகாரி பிரிவின் ஹமன்கல்ல, நாரங்கொட வடக்கு, நாரங்கொட தெற்கு, பட்டபொதெல்ல, மல்கமுவ, தொடங்பொத்த மற்றும் நாரங்கமுவ முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

Related posts

பருப்பிலும் ‘எல்பாடொக்சீன்’

wpengine

13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு பின்லாந்து ஒத்துழைப்பு…

wpengine

பெங்களூரில் உள்ள மாணவர்கள் இன்று இலங்கைக்கு

wpengine