உள்நாட்டு செய்திகள்

சீன பாதுகாப்பு அமைச்சர் சீனாவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங், சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் (27) நாட்டை வந்தடைந்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரை நேற்று (28) சந்தித்து பேசினார்.

இந்நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் இன்று காலை 8.55 மணியளவில் சீனா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

அவருடன் 37 பேர் இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அனைவரும் சீன விமான படைக்கு சொந்தமான பீ-4026 என்ற விசேட விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் மீட்பு

wpengine

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் அமைச்சர் பைஸருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை…

wpengine

வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்க நடவடிக்கை…

wpengine