உள்நாட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் விசேட சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று இன்று(19) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இந்த கூட்டத்தின் போது எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டத்தின் சில சரத்துகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒரு நிலைப்பாட்டினையும், ஏனைய கட்சிகள் வேறு நிலைப்பாட்டினையும் கொண்டுள்ள காரணத்தினால் அதனை அமைச்சரவையில், சமர்ப்பிக்க முடியாதுள்ளது.

அதேநேரத்தில், துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம், மே தின கூட்டத்தொடர் என்பன குறித்தும் இன்று இடம்பெறவுள்ள ஆளும் கட்சியினது பங்காளிகட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்காவுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்ட இராணுவ மேஜர் பாலியல் குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்…

wpengine

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய விசேட குழு…

wpengine

தரம் 01 மாணவர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு

wpengine