தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது பூங்குடிதீவு மாணவி வித்யாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பேசப்பட்டதாக கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு கோரி இருப்பதாகவும், அத்துடன் மீள்குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்பு சம்பந்தமாகவும் இதன் போது பேசப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.