Top Story 3உள்நாட்டு செய்திகள்

சகல பாடசாலைகளும் நாளை திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும் இரண்டாம் தவணைக் கற்றல் செயற்பாடுகளுக்காக நாளை(19) திறக்கப்படவுள்ளன.

கடந்த 9ஆம் திகதி முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம் முதல் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி மேல் மாகாண பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதற்கான சுகாதார வழிகாட்டியானது கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த சுகாதார வழிகாட்டியின் அடிப்படையிலேயே நாளைய தினம் சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை முன்னேற்ற 10 முதலீட்டாளர்கள் ஆதரவு.

wpengine

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு…

wpengine

சர்வகட்சி தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கும் பல கட்சிகள்!

wpengine